சங்க இலக்கியத்தில்
பிரபந்தமரபு-
முனைவர்.த.விஷ்ணுகுமாரன். தமிழ்த்துஇறை
திராவிடப்பல்கலைக்கழகம்.
எந்தவொரு இஇலக்கிய வகையாயினும் திடீரென உருகொள்வதில்லை
அதற்கென வரலாற்று சமூகப் பின்புலம்
இருக்கும் என்பதுடன் அது தான் தோன்றிய
காலகட்டத்திலுள்ள புதுமையையும் உள்கொண்டிருக்கும். இதன் மூலம் ஒரு இஇலக்கியவடிவம் அது எழுந்த காலகட்டத்திற்கேற்ற
புதுமைகளைக் கொண்டிருந்தாலும் அதன் இன்றியமையாத கூறுகள் அம்மொழியிலுள்ள
பழமரபுகளைக் கொண்டிருக்கும் என்பது புலனாகும். எடுத்துக்காட்டாக தற்கால திரையிசைப்
பாடல்களில் சங்கஇஇலக்கியப் பாடல்களின் கருத்துக்கள் கையாளப்பட்டிருக்கும்
பாங்கினைச் சுட்டலாம். இன்னும் ஓர் உதாரணமாக அண்ணாப் பிள்ளைத்தமிழ் என்ற இருபதாம்
நூற்றாண்டு இஇலக்கியப்படைப்பினையும் கூறலாம். இது
அறிஞர் அண்ணாவைப் பாட்டுடைத் தலைவனாக வைத்துப் போற்றுவதாக இருந்தாலும் கூட
அதன் அடிப்படை அமைப்பு பிள்ளைத்தமிழ்
எனும் பழமையான இஇலக்கியவடிவம் அல்லது பிரபந்தவகையைச் சார்ந்ததாகும்.