Showing posts with label மாணவர்பக்கம். Show all posts
Showing posts with label மாணவர்பக்கம். Show all posts

Wednesday, 29 July 2015

தமிழ் இலக்கியங்களில் அறிவியல்




தமிழ் இலக்கியங்களில் அறிவியல்


பெ.சுமதி > முனைவா;பட்ட ஆய்வாளா; (பகுதிநேரம்) >
தமிழ்த்துறை >அரசு கலைக்கல்லூhp (தன்னாட்சி) >சேலம் - 7.

முன்னுரை
எல்லாப் பொருளும் இதன்பால் உள்ள தமிழ்மொழி முன்னைப் பழமைக்கும் பழமையானது; பின்னைப் புதுமைக்கும் புதுமையானது.

தமிழ் இலக்கியமும் அறிவியலும் நெருங்கிய தொடர;படையவை. இலக்கியம் சிந்திக்கத் தூண்டுகிறது. அறிவியல் சிந்தனைகளின் உண்;மைகளைக் கண்டறிந்து நடைமுறைப்படுத்துகிறது. பழந்தமிழரின் இலக்கியங்கள் அணு தொடங்கி அண்டம் வரை பாடுகின்றன > அனுபவத்தோடு அறிவியலையும் கலந்து  சிந்திக்கத் தூண்டுகின்றன.

அணுவைத்துளைத்து ஏழ்கடலைப் புகட்டி

குறுகத் தரித்த குறள்

எனத் திருக்குறளின் பெருமையை ஔவையார; புகழ்ந்துள்ளார;. கண்ணுக்குப் புலப்படாத அணுவைப்பிளக்க முடியும் என்ற ஔவையார; வாக்கு இன்று சாத்தியமாகியுள்ளது. அன்றைய  தமிழரின் அறிவியல் வெளிப்பாட்டைப் பரிபாடலில் காணலாம். மேகமானது கடலில் உள்ள நீரை முகந்துகொண்டு வந்து ஊழி முடிவின்கண் மூழ்கடிக்க முயன்றது போல மழை பெய்தது என்ற கூற்று இதை மெய்ப்பிக்கிறது.


ஆசாரக்கோவையில் அறிவியல்




                                                ஆசாரக்கோவையில் அறிவியல்



 
க.கவின்பிரியா இ
ஆய்வியல் நிறைஞார்,
தமிழ்த்துறை,
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி ) ,
சேலம் -7.


முன்னுரை
                                தமிழர்களின்  வாழ்வுநெறிகள் பற்றி மிகச்சிறந்த முறையில் கூறுவன
பதினெண்கீழ்க்கணக்கு நூல்களாகும் .பதினெண்கீழ்க்கணக்கு நூல்களாவன , நாலடியார்,
நாண்மணிக்கடிiகை, இனியவை நாற்பது, இன்னா நாற்பது, கார் நாற்பது, களவழி நாற்பது, ஐந்திணை
ஐம்பது, திணைமொழி ஐம்பது, ஐந்திணை எழுபது, திணைமாலை நூற்றைம்பது, முப்பால், திரிகடுகம்,
ஆசாரக்கோவை, பழமொழி, சிறுபஞ்சமூலம், முதுமொழிக் காஞ்சி, ஏலாதி, கைந்நிலை அல்லது
இன்னிலை ஆகியவையாகும் . இப்பதினெண்கீழ்க்கணக்கு நூல்கள் மொத்தம் ஏறக்குறைய 3250
பாடல்களைக் கொண்டுள்ளது. பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் நீதி நூல்கள் 11, அகப்பொருள்
நூல்கள் 6, புறப்பொருள் நூல் 1 ஆகும். பதினெண்கீழ்க்கணக்கு நூல்களில் அறிவியல் செய்திகள் நிறையஉள்ளன.அவற்றுள் ஆசாரக்கோவையில் உள்ள அறிவியல் செய்திகளைப் பற்றிக்  காண்பதே
 இக்கட்டுரையின் நோக்கம் ஆகும்.

திருக்குறள் வெளிப்படுத்தும் உணவே மருந்து




திருக்குறள் வெளிப்படுத்தும் உணவே மருந்து

 பா. மணிவண்ணன்,
முனைவர்பட்ட ஆய்வாளர்,
தமிழ்த்துறை,
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),
சேலம் - 636 007.



           மனிதன் பிறக்கின்ற பொழுதே நோய்களுடன் பிறக்கின்றான் என்று அறிஞர்கள் கூறுகின்றனர்.  ‘நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்’ என்பது அனுபவத்தின் மொழி.  எவ்வளவு செல்வங்கள் மனிதனுக்கு இருந்த பொழுதிலும் நோயின்மையே மிகப்பெரிய செல்வமாகக் கருதப்பட்டது.  இத்தகு நோயின்மை வாழ்வுக்கு முதற்காரணமாக அமைவது உணவாகும்.  உணவே மனிதன் உயிர்வாழ அடிப்படையாக அமைகிறது.
உடம்பு செயல்பட வேண்டிய சக்தியை உணவு தருகின்றது.  நமக்குப் பல்வேறு பணிகளைச் செய்ய சக்தி தேவை.  இந்த இயக்குச் சக்தியை நாம் உண்ணும் உணவு வழங்குகின்றது.  நாம் விழித்திருக்கும் பொழுதும், தூங்கும் பொழுதும் நமது உள்ளுறுப்புகள் தொடர்ந்து செயல்படுகின்றன.  அவை செயல்படுவதால் தான் நாம் உயிர் வாழ்கின்றோம்.  நமது இரத்த ஓட்டம் செம்மையாக நடைபெற இருதயம் இயங்கிக் கொண்டே இருக்கின்றது.  நாம் பிராண வாயுவை உட்கொண்டு, கரியமிலவாயுவை வெளியிட சுவாசப் பைகள் செயல்படுகின்றன.  உண்ட உணவை வயிறும் குடல்களும் செரிக்கச் செய்கின்றன.  செரித்த உணவின் சாரம் உடம்பின் எல்லாப் பகுதிகளுக்கும் செல்ல வேண்டும்.  நமது உடம்பின் கழிவுப் பொருட்களை வெளியேற்ற குடலும், சிறுநீரகமும் பணி செய்கின்றது.  மூளை எண்ணத்தின் மூலமாகி உடம்பினை இயக்குகின்றது.  இத்தகைய அக உறுப்புகளின் பணிகள் முறையாக நடைபெறவேண்டிய சக்தியினை உணவே தருகிறது.  சரியான உணவு முறையை ஒருவன் கடைப்பிடிப்பானேயானால் அவன் நோயற்ற வாழ்வை வாழத் தகுதியுடையவனாகிறான்.  இத்தகு உணவு மருத்துவத்தின் சிறப்பை வள்ளுவத்தின் வழி இக்கட்டுரை ஆராய்கிறது.

Tuesday, 29 July 2014

2013-2014 மாணவர்கள்


(2013-2014   மாணவர்கள் விடை பெறும் நாளில்....நாள் -  28 மார்ச் 2014.)