செ.அருள்ஜோதி முனைவர் பட்ட ஆய்வாளர்,தமிழ்த்துறை
அரசு கலைக்கல்லூரி (தன்னாட்சி),சேலம்-7
வானதி இலக்கிய சிந்தனைச்
சிறுகதைகளில் பாலியல்-வன்முறை
மேனாட்டார் வருகையால் தமிழ் இலக்கியங்கள் மறுமலர்ச்சிப் பெற்றன. வளர்ச்சிப் பெற்ற
இலக்கியங்களில் சிறுகதை இலக்கியமும் ஒன்றாகும். சிறுகதைகளின் வளா்ச்சியில் இதழ்கள் முக்கிய
பங்கு வகித்ததோடு எழுத்தாளார்களை
உருவாக்கின. இதனால் தரமான சிறுகதைகளைத் தேர்ந்தெடுக்க முடியாமல் வாசகர்கள்
தடுமாறினார். இந்நிலையில் வானதி
பதிப்பகம் இலக்கியச் சிந்தனை என்ற அமைப்பை உருவாக்கி மாத சிறுகதைகளை தேர்ந்தெடுத்து
ஆண்டுதோறும் பன்னிரண்டு சிறுகதைகளை தொகுத்து சிறந்த சிறுகதையின் தலைப்பை நூலின்
தலைப்பாக வெளியிட்டு வருகின்றது. அச்சிறுகதை தொகுப்புகளில் நாற்று (2000), மனசு (2003), கழிவு (2004) ஆகிய தொகுப்புகளில் வரும்
சிறுகதையில் பெண்களுக்கு ஏற்படும் பாலியல் வன்முறையை ஆராயும் நோக்கில் இக்கட்டுரை
அமைந்துள்ளது.