Tuesday 29 October 2013

அடித்தளப் படிப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் அலகு-2

அடித்தளப் படிப்பு - தமிழ் - இரண்டாம் பருவம் அலகு-2
தொடர்ச்சி
ஊ. காளமேகப் புலவர் பாடல்கள்

            இவரது இயற்பெயர் வரதன். மேகம் மழை பொழிவதைப் போன்று இயல்பாக விரைந்து கவிபாட வல்லவர். சிலேடையாகவும் நகைச்சுவையாகவும் பாடும் திறம் மிக்கவர். காலம் 15 ஆம் நூற்றாண்டு. திருவானைக்கா உலா, பரப்பிரம்ம விளக்கம், திருவானைக்கா சரசுவதி மாலை, சமுத்திர விலாசம், சித்திர மடல் போன்ற சிற்றிலக்கியங்களையும் 187 தனிப்பாடல்களையும் பாடியுள்ளார்.

மேலும் வாசிக்க....

ஆமணக்குக்கும் யானைக்கும் சிலேடை

 முத்து இருக்கும், கொம்பசைக்கும், மூரித்தண்டு ஏந்திவரும்

கொத்திருக்கும், நேரே குலைசாய்க்கும், - எத்திசைக்கும்

தேமணக்கும் சோலைத் திருமலைரா யன்வரையில்

ஆமணக்கு மால்யானை யாம்.

வைக்கோலுக்கும் யானைக்கும் சிலேடை

 வாரிக் களத்து அடிக்கும் ; வந்துபின்பு கோட்டைபுகும் ;

போரில் சிறந்து பொலியாகும் ; - சீருற்ற

செங்கோல மேனித் திருமலைரா யன்வரையில்

வைக்கோலு மால்யானை யாம்.

பாம்புக்கும் வாழைப் பழத்திற்கும் சிலேடை

 நஞ்சிருக்கும் ; தோலுரிக்கும் நாதர்முடி மேலிருக்கும் ;

வெஞ்சினத்தில் பல்பட்டால் மீளாது ; - விஞ்சுமலர்த்

தேம்பாயும் சோலைத் திருமலைரா யன்வரையில்

பாம்புஆகும் வாழைப் பழம்.

சந்திரனும் மலைக்கும் சிலேடை
 நிலவாய் விளங்குதலால் ; நீள்வான் படிந்து
சிலபோது உலாவுதலால் ; சென்று தலைமேல்
உதித்து வரலால் உயர்மா மலையை
மதித்து நிகராக வழுத்து.
நாய்க்கும் தேங்காய்க்கும் சிலேடை
ஓடும் இருக்கும் ; அதன் உள்வாய் வெளுத்திருக்கும்!
நாடும் ; குலை தனக்கு நாணாது ; - சேடியே!
தீங்கானது இல்லாத் திருமலைரா யன்வரையில்தேங்காயு நாயுமிணை செப்பு.


எ. ஔவையார் பாடல்கள்

இடைக்கால ஔவையார் பாடிய தனிப்பாடல்களில் ஐந்து பாடல்கள் இங்கு பாடப்பகுதியாக இடம்பெற்றள்ளன.

விருந்தோம்பல் தன்மை

1.இருந்து முகந்திருத்தி ஈரோடு பேன்வாங்கி

விருந்து வந்ததென்று விளம்ப வருந்திமிக

ஆடினாள் பாடினாள் ஆடிப் பழமுறத்தால்

சாடினாள் ஓடோடத் தான்.                                                                                                                         

மூவகை மனிதர்

2 .சொல்லாம லேபெரியர் சொல்லிச் செய்வர் சிறியர்
சொல்லியுஞ் செய்யார் கயவரே நல்ல
குலாமாலை வேற் கண்ணாய் கூறுவமை நாடில்
 பலாமாவைப் பாதிரியைப் பார்.                                                           

அரசுக்கு நல்லது

  3.நூலெனிலோ கோல்சாயும் நுந்தமரேல் வெஞ்சமராம்

கோலெனிலோ ஆங்கே குடிசாயும் - நாலாவான்

மந்திரியும் ஆவான் வழிக்குத் துணையாவான்

அந்த வரசே யரசு. 

4.நகைக்கப் பெற்றாள்

 வெண்பா விருகாலிற் கல்லானை வெள்ளோலை
கண்பார்க்கக் கையால் எழுதானைப் - பெண்பாவி
பெற்றாளே பெற்றாள் பிறர்நகைக்கப் பெற்றாளே
எற்றோமற் றெற்றோமற் றெற்று.                                                                     

வீடும் விழல்

  5.மாடில்லான் வாழ்வு மதியில்லான் வாணிபம்நன்
நாடில்லான் செங்கோல் நடாத்துவது கூடும்
குருவில்லா வித்தை குணமில்லாப் பெண்டு
விருந்தில்லான் வீடு விழல்.

No comments: