Saturday 11 January 2014

கார் நாற்பது காட்டும் தமிழரின் வானியல் சிந்தனைகள்


கட்டுரை-14


கார் நாற்பது காட்டும் தமிழரின் வானியல் சிந்தனைகள்

பா.மணிவண்ணன்,     முனைவா;பட்ட ஆய்வாளர், தமிழ்த்துறை, அரசு கலைக்கல்லூரி(தன்னாட்சி),     சேலம் - 7.
                இருபத்தொன்றாம் நூற்றாண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் இந்த உலகானது, அறிவியல் வளர்ச்சியில் கண் இமை கை நொடிவேகத்தில் சென்று கொண்டிருக்கிறது. இத்தகைய அறிவியல் வளர்ச்சிக்குப் பழந்தமிழர்கள் ஊற்றாய் அமைந்தனர் என்றால் மிகையாகாது.

                                ஒன்றறிவதுவே உற்றறிவதுவே” (தொல். பொருள். 571:1)
                                மண்திணிந்த நிலனும்
                                நிலன்ஏந்திய விசும்பும்” (புறம். 2:1-2)
என்பன போன்ற அடிகள் தமிழரின் அறிவியல் சிந்தனையை நன்கு எடுத்தியம்புகின்றன. பண்டைய தமிழர்கள் நிலவியல், உயிரியல், இயற்பியல், வேதியியல், அண்டவியல் போன்ற பல்வேறு அறிவியல் துறைகளில் சிறந்து விளங்கியிருந்தனர். இத்தகைய பன்முக அறிவியல் சிந்தனைகளில் தமிழரின் வானியல் சிந்தனையை ஆராயும் விதமாக இக்கட்டுரை அமைகிறது.
வானியல்
                வானின் கண் நிகழும் பல்வேறு விதமான செயல்பாட்டினை ஆராயும் இயலை வானியல் என்றழைக்கின்றனா; வானியலாளாகள். பூமிக்கும்,  அதன்  காற்று    மண்டலத்துக்கும் வெளியே நடைபெறும் நிகழ்வுகளைக் குறிக்கும் நிலையே வானியல் ஆகும்;. 
பருவமாற்றம்
                சூரியனைப்  பூமி  சுற்றி  வருகிறது.  புவியும்   தன்னுடைய   அச்சில்  சுழன்று கொண்டிருக்கிறது. இந்நிகழ்வு யாவரும் அறிந்த ஒன்றே. புவியின் அச்சு சூரியனைச் சுற்றி புவி செல்லும் வழிக்கு நோ; கோணத்தில் இருந்தால் பருவங்கள் மாறாது, வருடம் முழுவதும் ஒரே தட்ப வெப்பநிலை நிலவும். ஆனால், பபூமி சற்றுச் சாய்வாகச் சூரியனைச் சுற்றி வருவதால் பருவமாற்றம் ஏற்படுகிறது. பூமி சாய்வாகச் சுற்றுவதற்குக் காரணம், ஒரு புறம் சூpயனின் ஈ;ப்பும் மறுபுறம் சந்திரனின் ஈர்ப்பும் இவற்றுடன் புவியின் சுழற்சியும் சோ;வதால்தான் சாய்வாகச் சுற்றுகிறது. இதனால் அதன் சாய்வுதிசை வடதுருவ நட்சத்திரத்தை நோக்கி அமைகிறது. இதன் விளைவாக வருடத்தில் ஒரு பாதியில் வடதுருவம் சூரியனை நோக்கிச் சாய்கிறது. மற்றொரு பாதியில் சூரியனை விட்டு விலகிச் செல்கிறது. இவ்வாறு சூpயனின் கதிர்கள் வெவ்வேறு விதமாக புவியில் விழுவதால் பருவ மாற்றங்கள் நிகழ்கின்றன. இத்தகையப் பருவ மாற்ற நுட்பத்தை பண்டைய தமிழா;கள் நன்கு அறிந்திருந்தத் திறத்தை,             
                                கடுங்கதிர் நல்கூரக் கார்செல்வம் எய்த” (கா;நாற்பது-2:1)
என்ற பாடல் அடி குறிப்பிட்டுள்ளளது. கடுமையான கோடைக்காலம் முடிவுற்று, குளிர்ச்சியுடைய கார்காலம் தொடங்கிய பருவமாற்றத்தை அறிந்த தமிழர்களின் வானியல் திறத்தை இதன்வழி அறியமுடிகிறது.
மழை பெய்யும் விதம்
                மழை நீர்உயி; நீர் மழைந்நீர் இல்லையென்றால் இந்த உலகில் எந்த உயிராலும் வாழமுடியாது. மழை நீரே மனித வாழ்க்கைக்கு இன்றியமையாததாக அமைகிறது. அது எவ்வாறு வானத்திலிருந்து பூமியை வந்தடைகிறது? வானத்தின் என்ன செய்கையால் மழை பொழிகிறது. அதாவது, கடலிலிருந்து அல்லது பிற நீர்நிலைகளிலிருந்து நீரானது சூpயனின் வெப்பதால் நீராவியாகி மேலெழுந்துச் சென்று மேகங்களை அடைகிறது. சூpயனின் வெப்பத்தால், சூடான காற்றால் கொண்டுச் செல்லப்பட்ட நீரானது, மேகங்களை அடைந்ததும் குளிர்ச்சியடைகிறது. குளி;ச்சியடைந்தப் பின்னா; கா;முகிலாக மாறி மழையாகப் பூமியை அடைகிறது.சூpயனின் வெப்பம் காரணமாகத் தண்ணீர் நீராவியாக மாறுகிறது. அதன் விளைவாகக் காற்றில் சூடு ஏற்படுகிறது. சூடாக்கப்பட்ட காற்று நீராவியைச் சுமந்து கொண்டு வானத்திலே செல்கிறது. அங்குக் காற்று குளிர்ச்சி அடைகிறது. நீராவி மழையாக மாறுகிறது            (வி.எஸ்.நாராயணன் முதலிய இருவா;, மக்கள் விஞ்ஞானம், ப. 111)என்ற கருத்தின் வழி மழைநீர்எவ்வாறு உருவாகி, பூமியை வந்தடைகிறது என்ற வானியல் அறிவை அறிந்துகொள்ள முடிகிறது. சில நூற்றாண்டுக்கு முன்பு தோன்றிய இவ்வறிவியல் அறிவை உலகிற்கு வழங்கியவா;கள் பழந்தமிழா;கள் என்பதை,
                                பறைக்குரல் ஏறொடு பௌவம் பருகி” (கா;நாற்பது -17:2)
                                கடல்நீ; முகந்த கமஞ்சூழ் எழிலி” (கா;நாற்பது -33:1)
                                விரிதிரை வௌ;ளம் வெறுப்பப் பருகிப்” (கா;நாற்பது-34:1)
என்;ற படல் அடிகள் குறிப்பிட்டுள்ளதை அறியமுடிகிறது.
மேகம் கருக்கொள்ளல்
                மேகம் என்பது புவியின் மேற்பரப்புக்கு மேல், வளிமண்டலத்தில் மிதக்கும் சிறிய நீ;த்துளிகள் அல்லது உறைந்த பளிங்குத்துகள்கள் ஒன்றாகச் சோ;ந்த ஒரு தொகுதியாகும். நீராவியானது குளிரும் போது பனித்துளிகளை உண்டாக்குகிறது. இது கண்ணுக்குத் தொpயாத அளவினை உடையது. பல துளிகள் ஒன்றாகச் சேரும் போது மேகமாக உருக்கொள்கிறது. செறிவானதும் ஆழமானதுமான மேகங்கள் கண்ணுக்குப் புலப்படும் அலைநீளம் கொண்ட ஒளிக்கற்றைகளைத் தெறிக்கும் தன்மை வாய்ந்தவை. இந்தக் காரணத்தால்தான் மேகங்களின் மேற்பக்கம் வெண்மையாகத் தோற்றம் அளிக்கிறது. மேகத்தின் அளவு அதிகரித்துக் கொண்டே செல்கையில் உட்புறத்தில் வெண்மை ஒளிக்குன்றி, அதன் கீழ்ப்புறம் கருமையாக மாறி மழைப்பொழிவை ஏற்படுத்தத் தயாராகிறது.
நீராவி மேலே செல்லச்செல்ல குளிர்ந்து கொண்டே போகிறது. குளி;ச்சியடைந்த நீராவிதான் நமக்கு மேகமாகத் தோன்றுகிறது. குளி;ச்சி அதிகாpக்க அதிகரிக்க சாதாரண மேகம் இருண்ட கா;மேகமாக மாறுகிறது” (ர.சண்முகம், விஞ்ஞானக்களஞ்சியம், ப.99)என்ற கருத்தானது மேகம் எவ்வாறு கருக்கொள்கிறது என்பதைப் பதிவு செய்துள்ளது. ஏறத்தாழ 15 ஆம் நூற்றாண்டிற்குப் பிற்பட்ட இவ்வானியல் சிந்தனையைத் தமிழா;கள், அதற்கும் பன்னூற்றாண்டுக்கு முன்பே நன்கு அறிந்திருந்த நிலையை,
                                “------------ வானம்
                                கருவிருந்(து) ஆலிக்கும் போழ்து” (கா;நாற்பது-1:3-4)
என்ற பாடல் அடியானது குறிப்பிட்டுள்ளது. நீர் நிலைகளிலிருந்து வெப்பத்தின் காரணமாக நீர்ஆவியாகச் சென்று மேகமாக உருவெடுத்து மழையாகப் பொழியக்கூடிய இத்தகைய நுட்ப அறிவை எவ்வித அறிவியல் உபகரணங்கள் இல்லாத பழங்காலத்தில் தமிழர்கள் துல்லிலயமாக அறிந்திருந்த நிலையை எண்ணும் போது தமிழனின் அறிவார்ந்த நிலையையும் அறிவியல் முன்னோடி என்பதையும் ஏற்காமல் மறுப்பா;உளரோ?
ஆலங்கட்டி மழை
                மழைத்துளியானது இறுகி பனிக்கட்டியாகப் பெய்கின்ற நிலையினைதான் ஆலங்கட்டி மழை என்கிறோம். இந்நிலை எவ்வாறு வானத்தில் நிகழ்கிறது என்றால், கோடைக்காலத்தில் நிலத்துக்கு அருகே உள்ள காற்றானது நிலத்தைவிட்டு உயரே செல்கிறது. அக்காற்று வானில் மேலும் கீழும் பலமுறை செல்கிறது. அவ்வாறு மேலே செல்லும் காற்று அதிக உயரத்தை அடையும் போது அங்கு நிலவும் உறை வெப்பநிலைக் காரணமாக சிறு பனிக்கட்டிப் படிகங்களாக மாறுகிறது. மேலும் அப்பனிக்கட்டிப் படிகங்கள் மேலிருந்து கீழாகச் சூடான காற்றினூடே விழுகின்ற நிலை ஏற்படுகிறது. அப்போது அவற்றைச் சுற்றி நீர்ப்படிய ஆரம்பிக்கிறது. கீழிருந்து மேலே செல்லும் காற்று மறுபடியும் அவற்றை மிகவும் குளி;ந்த நிலையில் தூக்கிச் செல்கிறது. அதனால் முன்பிருந்த பனிக்கட்டிப் படிகத்தின் மேல் மீண்டும் ஒரு பனிஏடு உருவாகிறது. இவ்வாறு சூடானதும், குளிர்ந்தும் உள்ள காற்றுக்கிடையே மேலும் கீழுமாக பலமுறைத் தூக்கிச் செல்லப்படுவதால், பனிஏடுகள் பல உருவாகி ஒன்றன் மேல் ஒன்று படிந்து இறுதியில் ஆலங்கட்டியாக மாறுகிறது. பொpதான ஆலங்கட்டி எடை தாங்க முடியாமல் பூமியல் ஆலங்கட்டி மழையாக விழுகிறது. இத்தகைய வானியல் நுட்பத்தைப் பண்டைய தமிழா;கள் நன்கு அறிந்திருந்தத் தன்மையை,
                                அயிர்மணல் தண்புறவின் ஆலி - புரள”; (கார்நாற்பது-3:2)
என்ற அடியானது முல்லைநிலக் காட்டில் ஆலங்கட்டிகள் விழுவதைப் பதிவு செய்துள்ளது. இதன் மூலம் ஆலங்கட்டி மழை எவ்வாறு உருப்பெறும்விதம் மறைமுகமாக சொல்லப்பட்டதையும், தமிழாpன் வானியல் அறிவையும் பெறமுடிகிறது.
இடி-மின்னல் பற்றிய சிந்தனை
                மின்னல் என்பது மழைக்காலங்களில் மேகங்களின் இடையே தோன்றி நொடிப்பொழுதில் மறையும் மின்பொறிக் கீற்றல் ஆகும். மழை மேகங்களில் இருக்கும் அணுக்கள் பல வழிகளில் உராய்ந்து மின்னூட்டம் பெற்று விடுகின்றன. சில மேகங்கள் நேர் மின்னூட்டமும், சில மேகங்கள் எதிர்மின்னூட்டமும் பெறுகின்றன. எதிர்எதிர் மின்னூட்டம் கொண்ட மேகக்கூட்டங்கள் வரும் போது, மின்னூட்ட ஈர்ப்பு விசையால் காற்றின் வழியே மின் ஆற்றல் பாய்ந்து மேகம் மின்னூட்டத்தை இழக்கின்றன. இவ்வாறு, காற்றின் வழியே மின் ஆற்றல் பாய்ந்து மின்னூட்டம் ஏற்படும் போது ஒரு ஒளி உண்டாகிறது. அதுவே மின்னலாகும். எதி;எதி; மின்னூட்டம் பாயும் போது ஒருவகை ஒலியும் ஏற்படும், அதுவே இடியாகும். இத்தகைய வானியல் அறிவைத் தமிழா;கள் அறிந்திருந்ததை,
                                கடிதிடி வானம் உரறும் நெடுவிடை” (கா;நாற்பது-6:3)
என்ற அடி இடியைப் பற்றியும்,
                                எச்சாரும் மின்னும் மழை” (கார்நாற்பது-7:4)
என்ற அடி மின்னலைப் பற்றியும் குறிப்பிட்டுள்ளதிலிருந்து, இடியைப் பற்றியும், மின்னல் பற்றியும் பழந்தமிழர்கள் அறிந்திருந்ததையும், அவா;களின் வானியல் சிந்தனைகளையும் நன்கு அறிய முடிகிறது.
வானவில்
                வானவில் என்பது ஒரு பெரிய வளைந்த நிழற்பட்டை அல்லது நிறங்களின் தொகுப்பாகும். கதிரவன் வானில் இருக்கும்போது பெய்கின்ற மழையின் துளிகளை ஊடுருவிச் சென்று, ஒளியைப் பிளக்கும்; நிறங்களின் தொகுப்பு வானவில்ஆகும். செம்மஞ்சள், மஞ்சள், சிவப்பு, பச்சை, நீலம், ஊதா போன்ற நிறங்கள் ஒளியைப் பிளக்கும் போது ஏற்படும். இந்நிறங்கள் தனக்கடுத்து அடுத்து உண்டாகி ஒரு உருளை வடிவில் காட்சி தரும். இவ்வானவில் காலையிலோ அல்லது மாலையிலோதான் உருவாகும். ஏனெனில் கதிரவன் மிக உயரத்திற்குச் சென்றுவிட்டால் வானவில் தோன்றாது. இத்தகைய வானவில் பற்றிய வானியல் நுட்பத்தைப் பண்டைய தமிழ் இலக்கியம் பதிவு செய்துள்ளதை,
                                திருவில் விலங்கூன்றித் தீம்பெயில் தாழ” (கா;நாற்பது-1:1)
என்ற அடிகள் வழி அறியமுடிகிறது.
முடிவுரை
     அறிவியல் துறைகளில் மிகப்பழமையானது வானியல் துறை. இந்த வானியல் துறைக்கும் அதன் அறிவியல் சிந்தனைக்கும், அதன் ஆராய்ச்சிக்கும் வித்திட்டவன் தமிழன்.   சூரியனின் செயல்பாட்டால் பருவநிலையில் மாற்றம் ஏற்படுவதை அறிந்திருந்தனர்.இடி-மின்னல் தோற்றம் குறித்தும், நீ; ஆவியாகி, மேலே சென்று, மேகமாக உருக்கொண்டுக் குளிர்ச்சியடைந்து, கார்முகிலாக மாறி மழைப்பொழியும் சிந்தனையை அறிந்திருந்தனர்.மழைத்துளிகளை ஊடுருவிச் செல்லும் ஒளியைப் பிளப்பதே வானவில்என்பதை அறிந்திருந்தனா;.


No comments: