Thursday 5 November 2015

நன்னூல் -எழுத்து 5



நன்னூல் -எழுத்ததிகாரம் வினாவிடையில்
101. , , ய ஆரிய எழுத்துக்கள் தமிழில் எவ்வாறு புணரும்?
, , ய என்னும்  மெய்கள் முதலிற்கொண்ட ஆரிய மொழிகள் தமிழில் வரும்போது பின்வருமாறு திரியும்.
ஆரிய எழுத்துதமிழ் எழுத்து(உ.ம்)
  முன்அ, , உ வரும்இராமன், உரோமம், அரங்கம்
ல- முன்இ, உ வரும்இலாபம், உலோபம்
ய-முன் இ,கரம் வரும்இயக்கன்



102. மூன்றாம் வேற்றுமை உருபு, ஆறாம் வேற்றுமை உருபு முன் வல்லினம் வரின் என்ன நிகழும்?
மூன்றாம் வேற்றுமை உருவு முன் வல்லினம் வரின் இயல்பாகும். (உ.ம்) கண்ணன்
ஆறாம் வேற்றுமை உருபு முன் வல்லினம் இயல்பாக வந்தது
(உ.ம்) தனகைகள் தன செவிகள்

103.  , ற ஒற்றுக்கள் எவ்வாறு புணரும்?
, ற ஒற்றுக்கள் (அ) குற்றியலுகரங்கள் வருமொழி எதுவரினும் வந்தமெய்யே மிகும்.
(உ.ம்) ஆடு+கால் = ஆட்டுக்கால்
சோறு+வளம்=சோற்றுவளம்

104. குற்றியலிகரத்தின் முன் வல்லினம் வரின் என்ன நிகழும்?
குற்றியலுகரத்தின்
 முன் வல்லினம் வரின் இயல்பாகும்.
(உ.ம்) ஆறு+தலை=ஆறுதலை
எஃகு+பெரிது = எஃகு பெரிது

106. முல்லை+புறவம் விதி யாது?
முல்லை+புறவம்=முல்லையம்புறவம்
ஐகார ஈற்றுச் சொற்கள் வேற்றுமையில் வருமாயின் ஈற்று ஐகாரங்கெடுதலுடன் அம்சாரியை பெற்று முடியும். சில சொற்கள் ஐகாரம் கெடாமல் வரும்.

107. தோன்றல், கெடுதல், விகாரம் என்றால் என்ன? உ.ம்?
தோன்றல்
வாழை+பழம்=வாழைப்பழம்.
இச்சொற்கள் இரு சொற்களின் இடையில் புதிதாக ஒற்று தோன்றியுள்ளதால் இது தோன்றல் விகாரம் ஆகும்.
திரிதல்
பல்+பொடி=பற்பொடி
இச்சொற்களில் உள்ள ல்திரிந்து ற்ஆக மாறியுள்ளது. எனவே இது திரிதல் விகாரம் ஆகும்.
கெடுதல்
மரம்+நாய்= மரநாய்
இதில் உள்ள ஒற்று கெட்டு விட்டதால் இது கெடுதல் விகாரம் எனப்படும்.
108. மெய்முன் உயிர் வருவது இயல்பா? விகாரமா?
மெய்முன் உயிர் வருவது இயல்பாகும்.
தோன்றல்+அழகன்= தோன்றலழகன்
நிலைமொழியின் இறுதியில் நின்ற மெய்யின் மேல் வருமொழி முதலிலுள்ள உயிரெழுத்து வந்து ஒற்றுபட்டு நிற்பது இயல்பு புணர்ச்சியாகும்.
109. ண முன் நகரம் வரின்?
நிலைமொழி இறுதியில் கரம் வரின், வருமொழி முதலில் உள்ள நகரத்தின் நகரமெய் கெட்டு கரமாக திரியும். (உ.ம்) துண்+நன்று=தூணன்று
தூண்+ந்+அன்று = தூணன்று
110. மீன், தேன், குயின் புணரும் முறை யாது?
மீன்
மீன் என்னும் சொல்லின் இறுதி னகர மெய், வேற்றுமைப் புணர்ச்சியில் வல்லினம் வரின் றகர மெய்யாகத் திரிந்தும் திரியாதும் வரும்.
தேன்
மீன்+கண்=மீற்கண்

i)வருமொழியில் மூவினம் வந்தால் இயல்பாகும். (உ.ம்) தேன்+கடிது=தேன்கடிது
ii)மெல்லினம் வந்தால் னகர மெய் இரு வழியிலும் கெடும். (உ.ம்) தேன்+மொழி= தேன் மொழி, தேமொழி
iii)வல்லினம் வந்தால் னகர மெய் கெட, வந்த வல்லினமோ அதற்கு இனமான மெல்லினமோ மிகும். (உ.ம்) தேன்+குடம்=தேன்குடம், தேக்குடம், தேங்கும்
குயின்
குயின் என்னும் பெயரும், ஊன் என்னும் பெயரும் வேற்றுமை புணர்ச்சியில் இயல்பாக வரும்.
(உ.ம்) குயின்+கடுமை=குயின்கடுமை
ஊன்+கடுமை=ஊன் கடுமை
111. மகரமெய் முன் ங, ஞ வரின்?
நுந்தம்
எம் தம் ஈறாம் மவ்வரு ஞநவே
நும், தம், எம், நம் என்னும் சொற்களின் இறுதியில் உள்ள மகர மெய் வருமொழி முதலில் வருகின்ற ஞகர, நகரங்களாகத் திரியும்.
(உ.ம்) நும்+ஞாண்= நுஞ்ஞாண்  நும்+நூல் = நுந்நூல்
தம்+ஞாண் =தஞ்ஞாண்   தம்+நூல் = தந்நூல்
எம்+ஞாண்= எஞ்ஞாண்  எம்+நூல் = எந்நூல்
நம்+ஞாண்= நஞ்ஞாண்  நம்+நூல் = நந்நூல்

112. கீழ் முன் வல்லினம் வரின்?
கீழ் என்னும் சொல்லின் முன் வல்லினம் வரின் ஒருகால் இயல்பாகியும், ஒருகால் மிக்கும் வருகின்ற விகற்பத்தைப் பொருந்தும்.
(உ.ம்) கீழ்+குலம்=கீழ்குலம், கீழ்க்குலம்
கீழ்+படி=கீழ்படி, கீழ்ப்படி
113. வல்லுக்குதிரை, வல்லக்குதிரை எது சரி?
வல்லுக்குதிரை, வல்லக்குதிரை இரண்டுமே சரி. வல் என்னும் சொல்லின் முன் பலகை, நாய் என்னும் பெயர்கள் வரினும் பிற பெயர்கள் வரினும் வேற்றுமையில் உகரச் சாரியையேயன்றி அகரச் சாரியையும் பெறும் வல் என்னும் சொல்லின் முன் வல்லினம் வரின் ஒற்று மிகும்.
114. இலக்கணப்போலி என்றால் என்ன?
சொற்கள் முன்பின்னாக புணர்ந்திருப்பதை இலக்கணப்போலி என்று கூறுவர்.
(உ.ம்) முன்+இல் என்பதை முன்றில் என பயன்படுத்துகிறோம். ஆனால் இது இல்+முன் என்பதன் சேர்க்கை.
115. , ள முன் தகரம் வரின்?
தனிக்குற்றெழுத்தைச் சார்ந்து வராத ல, ள மெய்கள் அவ்வழியில் வருமொழிக்கு முதலில் வந்த தகரம் திரிந்த இடத்தில் கெடும்.
1.வேல்+தீது=வேறீதுவாள்+தீது=வாடீது
அல்வழியல் வருமொழித் தகரம் திரிந்த இடத்தில் ல, , கெட்டன.
116. மகா+ஈசன் எவ்வகைப் புணர்ச்சி கூறு?
குணசந்தி
, ஆ முன் இ, ஈ என்னும் எழுத்துக்களுள் ஒன்று வரின் அவ்விரண்டும் கெட ஓர் ஏகாரம் தோன்றும்.
(உ.ம்) மாக+ஈசன்=மகேசன்
117. சாரியை என்றால் என்ன?
சாரியை என்பது ஒரு பதத்தின் முன் அன், ஆன் முதலிய விகுதிகளோ, த், ட் முதலிய பதங்களோ ஐ, ஆல், கு முதலிய வேற்றுமை உருபுகளை வந்து சேரும்போது பொருள் முற்றுப் பெருவதற்கு இடையே சில சொற்கள் வந்து சேருவதுண்டு. இவற்றுக்கு சாரியை என்று பெயர். சில சமயம் சாரியை வரும் புணர்ச்சிகளும் உண்டு. வந்த சாரியை திரிதலும் உண்டு.
(உ.ம்)
பாடுகின்றான் - (சாரியை வரவில்லை)
படுகின்றனன் - (சாரியை பெற்றது)
மரத்தினை  (2 சாரியை பெற்றது)
(மரம்+அத்து+இன்+உ+கு)
118 ஒன்று என்பதன் வேற்றுமைகள் எட்டு கூறுக?
ஒன்று  பெயர்
ஒன்றை 
ஒன்றால்  ஆல்
ஒன்றுக்கு  கு
ஒன்றின் - இன்
ஒன்றது  அது
ஒன்றின் கண் - கண்
ஒன்று  விளி
119. வேற்றுமை உருபுகள் யாவை?
வேற்றுமை உருபுகள் 8 ஆகும். அவை, பெயர், , ஆல் (ஓடு), கு, இன், அது, கண், விளி
120. உருபு புணர்ச்சி என்றால் என்ன?
வேற்றுமை உருபுகள் வெளிப்படையாக தெரியுமாறு புணரும் புணர்ச்சி ஆகும்.
(உ.ம்) கல்லால் எரிந்தான்.

நன்னூல் எழுத்திகாரம் வினாவிடையில்

121. பொருட்புணர்ச்சி என்றால் என்ன?
வேற்றுமை உருபு மறைந்து நிற்க அவ்வுருபின் பொருள் தெரியுமாறு புணரும் புணர்ச்சி (உ.ம்) கல் எறிந்தான்.
122. சிறுகண்+களிறு எவ்வாறு புணரும்?
சிறுகண்+களிறு=சிறுகட்களிறு
வருமொழி முதலில் வல்லினம் வந்தால் ண, ன என்ற நிலைமொழி இறுதிமெய்கள், முறையே ட, ற என்ற மெய்களாகத் திரியும்.
123. சாதி பற்றி வரும் மெய்யீறு எவ்வாறு புணரும்?
i) சாதி பற்றி வரும் பெயர் குழுஉ (கூட்டம்) பற்றி வரும் பெயர், பரண், கவன் என்னும் பெயர்கள் ஆகியவற்றின் இறுதியில் வரும் கரம் வேற்றுமையின் வல்லினம் வரின் இயல்பாகும்.
(உ.ம்) பாண்+குடி=பாண்குடி
அமண்+சேரி=அமண்சேரி
பரண்+கால்=பரண்கால்
கவண்+கால்=கவண்கால்
ii) உணவுக்கு உரிய எள் என்னும் சொல்லின் திரிபாகிய எண் என்னும் பெயர், சாண் என்னும் அளவுப்பெயர் ஆகியவற்றின் இறுதியில் வரும் கரம் அல்வழியில் வல்லினம் வரின் டகரமாகத் திரியும்.
(உ.ம்) எண்+கடிது=எட்கடிது
சாண்+கோல்=சாட்கோல்
124. தேக்குடம், தேங்குடம் எது சரி? ஏன்?
தேக்குடம், தேங்குடம் இரண்டும் சரி. ஏனெனில், தேன் என்னும் சொல்லின் இறுதி னகர மெய் அல்வழி வேற்றுமை ஆகிய இருவழியிலும் வல்லினம் வரின் னகர மெய் கெட, வந்த வல்லினமே அதற்கு இனமான மெல்லினமோ மிகும்.
(உ.ம்) தேன்+குடம்=தேன் குடம், தேக்குடம், தேங்குடம்
125. வல்லுநாய், வல்ல நாய் எது சரி?
வல்லுநாய் வல்லநாய் இரண்டும் சரி. வல் என்பதன் முன் பலகை, நாய் என்னும் பெயர்கள் வரினும் பிற பெயர்கள் வரினும் வேற்றுமையில் உகரச் சாரியையும், அகரச் சாரியையும் பெறும். (வருமொழியில் வல்லினம் வராததால் ஒற்று மிகவில்லை.)
126. னகரம் முன் நகரம் வரின்?
நிலைமொழி இறுதியில் கரம் வரின் வருமொழி முதலில் உள்ள நகரத்தின் நகரமெய் கெட்டு னகரமாக திரியும். (உ.ம்) அரசன்+நன்மை= அரசனன்மை
அரசன்+ந்+அன்மை=அரசனன்மை
127. கண்ணன் 8 வேற்றுமை உருபுகளை எழுதுக?
கண்ணன் - பெயர்
கண்ணனை- ஐ
கண்ணனால்  ஆல்
கண்ணனுக்கு  கு
கண்ணனின் - இன்
கண்ணனது  அது
கண்ணன் கண்- கண்
கண்ணா  விளி
128. , கண் போன்ற வேற்றுமை உருபுகள் பெயருடன் எவ்வாறு புணரும்?
கண்ணன்+ஐ = கண்ணனை
கண்ணன்+கண் = கண்ணன் கண்
129. புளியங்காய் சாரியை கண்டுபிடி?
புளியங்காய் = புளி+அம்+காய்அம் சாரியை பெற்றது.
130. எல்லாம் உயர்தினை சாரியை கூறுக?
எல்லாம் என்னும் சொல் உயர்திணையில் வரும்போத இடையில் நம் சாரியையும் உருபுக்குப் பின் முற்றும்மையும் பெறும். எல்லாம்+நம்+ஐ+உம் = எல்லாநம்மையும்.
131. கோ வேற்றுமை உருபுடன் எவ்வாறு கூடும்?
ஆ.மா.கோ. என்னும் மூன்று சொற்களும் உருபுகளோடு புணரும் போது னகரச் சாரியை பெறும் கோ+ஐ=கோனை உகரச் சாரியை பெறும்.
132. அஃது வேற்றுமை உருபுடன் எவ்வாறு கூடும்?
அஃது என்னும் சுட்டுப் பெயர்களில்  சுட்டெழுத்தின் முன் உள்ள ஆய்தம், ஆறு வேற்றுமை உருபுகளோடும் புணரும் போது அன் சாரியை வரின் கெடும்.
அஃது+ஐ= அதனை
வரின் என்றமையால் உருபேற்கும்போது அன் சாரியை வராமலும் இருக்கும். அப்போதும் ஆய்தம் கெடாது.
அஃது+ஐ= அஃதை
133. நிலைமொழி அகரம் இருப்பின் அத்துச் சாரியை எவ்வாறு புணரும்?
அத்துச் சாரியையின் முதலில் உள்ள அகரம், அகர ஈற்றுச் சொல்லுக்கு முன் வந்தால் கெடும்.
1)மக+அத்து+கை
ம+க்+அ+அத்து+கை
மகத்துக்கை  இயல்பு ஈறு
2)மர+அத்து+நிழல்
மர்+அ+அத்து+நிழல்
மரத்து நிழல்  விதி ஈறு.
134. சாரியை வகைகள் கூறுக?
சாரியை மூன்று வகைப்படும். அவை,
i)எழுத்துச் சாரியை  அகரம், ஏகாரம் முதலியன
ii)பதச் சாரியை  அன், ஆன் முதலியன
iii)இயல்பு சாரியை  தன்+கை=தன்கை
135. ஆள் விகுதி ஆண்பால் பெயர்களுக்கு வரும் சொல்லை கூறுக?
(உ.ம்) பெருமாள்  ‘ஆள்விகுதி
பெருமாள் என்பதில் உள்ள ஆள்விகுதி ஆண்பாலைக் காட்டுகின்றன. எனவே ஆன்விகுதி, ஆள் விகுதி எனத் திரிந்து ஆண்பாலை உயர்த்தியது எனக் கொள்க.
136. , ன ஈற்று சொற்கள் புணரும் வகையை ஒரு கட்டுரை வரைக?
ணகர னகர ஈறு கெடுதல்
குறில் அணைவு இல்லா ணனக்கள் வந்த
நகரம் திரிந்துழி நண்ணும் கேடே.
தனிக் குற்றெழுத்தை அடுத்து வராமல் ஒருமொழி, தொடர் மொழிகளைச் சார்ந்து வரும் ணகர, னகர மெய்கள், வருமொழிக்கு முதலில் வந்த நகரம் திரிந்த இடத்தில் கெடுதலைப் பொருந்தும்.
(உ.ம்) i) தூண்+நன்று ii) அரசன்+நல்லன் =
தூண்+ந்+அன்றுஅரசன்+ந்+அல்லன்
தூணன்றுஅரசனல்லன்
தூண்+நன்று=தூணன்றுஅரசன்+நல்லன்=அரசனல்லன்
ணகர ஈற்றுப் பெயர்களுக்கு சிறப்பு விதி
சாதி குழுஉப் பரண் கவன் பெயர் இறுதி
இயல்பாம் வேற்றுமைக்கு உணவு என் சாண் பிற
டவ்வா கனும் ஆம் அல்வழி யும்மே.
1.சாதி பற்றி வரும் பெயர், குழுஉ பற்றி வரும் பெயர் வேற்றுமையில் ணகரம் இயல்பாயிற்று
உம். பாண்+குடி= பாண்குடி
அமண்+சேரி= அமண் சேரி
2.பரண், கவண் என்னும் பெயர்கள் ஆகியவற்றின் இறுதியில் வரும் னகரம் வேற்றுமையில் வல்லினம் வரின் இயல்பாகும்.
உம். பரண்+கால்= பரண்கால்
கவண்+கால் = கவண்கால்
3.உணவுக்கு உரிய எள் என்னும் சொல்லின் திரிபாகிய எண், என்னும் பெயர், சாண் என்னும் அளவுப் பெயர் ஆகியவற்றின் இறுதியில் வரும் ணகரம் அல்வழியில் வல்லினம் வரின் டகரமாகத் திரியும்.
உம். எண்+கடிது= எட்கடிது
சாண்+கோல்= சாட்கோல்
னகர ஈற்று சாதிப் பெயர்
னஃகான் கிளைப்பெயர் இயல்பும் அஃகான்
அடைவும் ஆகும் வேற்றுமைப் பொருட்கே.
1)னகரத்தை இறுதியாக உடைய சாதிப் பெயர் வேற்றுமையில் வல்லினம் வரின் ஈறு திரியாமல் இயல்பாகும்.
உ.ம். எயின்+குடி= எயின் குடி

2)னகரத்தை இறுதியாக உடைய சாதிப்பெயர் வேற்றுமையில் வல்லினம் வரின் அகரச் சாரியையும் பெறும்.
உம். எயின்+சேரி= எயினச் சேரி

137. பதவியில் என்னும் இயலில் வரும் செய்திகளைத் தொகுத்துரைக்க?
பதவியலில் பகுதி, விகுதி, இடைநிலை என்னும் பகுபத உறுப்புகளின் மூன்று உறுப்புகளைக் காண்கிறோம்.
பதம்
நூற்பா
எழுத்தே தனித்தும் தொடர்ந்தும் பொருள்தரின்
பதமாம் அதுபகாப் பதம் பகுபதம் என
இருபா லாகி இயலும் என்ப.
எழுத்துக்கள் ஒவ்வொன்றாகத் தனித்தோ (அ) இரண்டு முதலாகத் தொடர்ந்தும் பிற பொருளை தருமானால் அது பதம் எனப்படும்.
பதத்தின் வகை
1)பகுபதம்
2)பகா பதம்

1)பகுபதம்
நூற்பா பொருள் இடம் காலம சினை குணம் தொழிலின்
வரு பெயர் பொழுதுகொள் வினைபகு பதமே.
பொருள், இடம், காலம், சினை, குணம், தொழில் ஆகிய ஆறும் காரணமாக வருகின்ற சொற்கள் தெரிநிலையாகவும், குறிப்பாகவும் காலத்தைக் கொள்ளும் வினைச் சொற்கள் பகுபதங்கள் ஆகும்.

உ.ம். தொடரெழுத்து ஒருமொழிகள். (கூனி, குழையன்)

2)பகா பதம்

நூற்பா பகுப்பால் பயனற்று இடுகுறி ஆகி
முன்னே ஒன்றாய் முடிந்தியல் கின்ற
பெயர்வினை இடைஉரி நான்கும் பகாப்பதம்.
பெயர்ச் சொல்லும், வினைச்சொல்லும் இடைச்சொல்லும், உரிச்சொல்லும் ஆகிய நான்கும் பகாப்பதங்கள் ஆகும்.
உ.ம். ஓரெழுத்து ஒருமொழிகள் (கோ, வா, பை)
ஓரெழுத்தொருமொழி
எழுத்துக்கள் தனித்து நின்றுப் பொருளைத் தருபவை ஓரெழுத்தொரு மொழி ஆகும். ஆவ்வாறான எழுத்துக்கள் 42 ஆகும்.
உ.ம் ஆ=பசு ஐ= தலைவன் கோ=அரசன் மா=பெரிய
தொடரெழுத்தொருமொழி
பகாப்பதங்கள் இரண்டெழுத்து முதல் ஏழெழுத்து ஈறாகவும் பகுபதங்கள் இரண்டெழுத்து முதல் ஒன்பதெழுத்து ஈறாகவும் வரும்.
உ.ம். பகா பதம் = அணி, அறம், உத்திரட்டாதி
பகுபதம்= கூனி, உத்திரட்டாதியன்
பகுபத உறுப்புகள்
நூற்பா
பகுதி விகுதி இடைநிலை சாரியை
சந்தி விகாரம் ஆறினும் ஏற்பவை
முன்னிப் புணர்ப்ப முடியும்எப் பதங்களும்
பகுதி, விகுதி, இடைநிலை, சந்தி, விகாரம் என்னும் ஆறும் பகுபத உறுப்புகள் ஆகும்.
(உ.ம்) நடந்தனன்=நட+த்(ந்)+த்+அன்+அன்
நட-பகுதி, த்-சந்தி, (ந்) ஆனது விகாரம், த்-இடைநிலை, அன்-சாரியை, அன்-விகுதி.
பகுதி
தத்தம்
நூற்பா
பகாப்ப தங்களே பகுதியாகும்.
பெயர்ப் பகாபதம், வினைப் பகாபதம் ஆகியவற்றில் அவற்றின் முதலில் நிற்கும் பகாப்பதங்களே பகுதிகள் ஆகும். (உ.ம்) பொன்னன்=பொன்-பகுதி,
அ) பண்புப் பகுதி
செம்மை முதலாகக் கூறப்பட்ட பதினொன்றும் இவற்றுக்கு எதிர்மறையாக வருகின்ற வெண்மை முதலியனவைகளும் இவை போன்ற பிறவும் பண்புப் பொருளில் இருந்து வேறுபொருள் பகுக்க முடியாத தன்மை வாய்ந்த பதங்கள் ஆகும்.
(உ.ம்)
செம்மை ஒ வெண்மை
தீமை ஒ நன்மை
பண்புக்குரிய இயல்கள்
நூற்பா
ஈறுபோதல் இடை உகரம் இய்யாதல்
ஆதிநீடல் அடிஅகரம் ஐ ஆதல்
தன்ஒற்று இரட்டல் முன்நின்ற மெய்திரிதல்
இனம்மிகல் இனையவும் பண்பிற்கு இயல்பே.
i)ஈறுபோதல்
ii)இடை உகரம் இய்யாதல் (கரியன்)
iii)ஆதிநீடல் (பாசி)
iஎ)அடி அகரம் ஐ ஆதல் (பைந்தார்)
எ)தன்ஒற்று இரட்டல் (வெற்றிலை)
i)முன்னின்று மெய்திரிதல் (சேதாம்பல்) இவை ஆறும் பண்புக்குரிய இயல்களாகும்.
ஆ) ஏவல் வினைப் பகாபதம்
நுட, வா, மடி, சீ, விடு, கூ, வே, வை, நொ, போ, வௌ, உரிஞ், உண், பொருந், திரும், தின், தேய், பார், செல், வவ், வாழ், கேள், அஃகு என்ற 23ம் செய் எனும் ஏவல் வினை பகாபதங்கள் ஆகும்.
விகுதி
விகுதி என்பது பகுபத உறுப்புகளில் ஒன்று. இது இறுதியில் இருப்பது எனவே இறுதிநிலை எனப்படும். இவை 2 வகைப்படும்.
i)வினை விகுதி  ii) பெயர் விகுதி
அ) வினை விகுதி
வினையின் இறுதியில் வரும் விகுதிகள் 37 ஆகும். வினை விகுதிகள் தெரிநிலை வினை விகுதி, குறிப்பு வினை விகுதி என இருவகைப்படும். அவை இரண்டும் 37க்குள் அடங்கும். வினை விகுதி வினைமுற்று என்றும் அழைக்கப்படும்.

i)ஆண்பால் படர்கை வினைமுற்று விகுதி=அன், ஆன்
ii)பெண்பால் படர்கை வினைமுற்று விகுதி=அள், ஆள்
iii)பலர்பால் படர்கை வினைமுற்று விகுதி=அர், ஆர், , மார்
iஎ)பலவின்பால் படர்கை வினை விகுதிகள்=அ,
எ)ஒன்றன்பால் படர்கை வினை விகுதி=து,டு,று
i)தன்மை ஒருமை வினை விகுதி= து,டு, று, கு, என், ஏன், அல், அன்
ii)தன்மை பன்மை வினை விகுதி=அம், ஆம், எம், ஏம், ஒம், கும், டும், தும், றும்
iii)முன்னிலை ஒருமை வினை விகுதி=ஐ, ஆய்,
iஒ)முன்னிலை பன்மை வினை விகுதி=மின், இர், ஈர்
ஒ)வியங்கோள் வினை விகுதி=க, , ஈயர்
i)செய்யுள் எனும் வினைமுற்று=உம்
ஆ) பெயர்விகுதி
ஆன், , மார், தை, மான் ஆகியவை பெயர் விகுதிகள் ஆகும்.
இடைநிலை
பகுதிக்கும் விகுதிக்கும் இடையில் இருப்பது இடைநிலை எனப்படும்.
நூற்பா
இலக்கியம் கண்டு அதற்கு இலக்கணம் இயம்பலின்
பகுதி விகுதி பகுத்து இடை நின்றதை
வினைப்பெயர் அல்பெயர்க்கு இடைநிலை எனலே.
இடைநிலை வகைகள்
இடைநிலை மூன்று வகைப்படும். அவை i) இறந்த கால இடைநிலை ii) எதிர்கால இடைநிலை iii) நிகழ்கால இடைநிலை ஆகியவை ஆகும்.
அ) இறந்த கால இடைநிலை
நூற்பா
தடற ஒற்று இன்னே ஐம்பால் மூவிடத்து
இறந்த காலம் தரும் தொழில் இடைநிலை
த், ட், ற், ன் என்பன இறந்த கால இடைநிலை எனப்படும். இவை ஐம்பால், மூவிடங்களிலும் வரும்.
உ.ம் படித்தான்-த், உறங்கினான்- இன்
ஆ) நிகழ்கால இடைநிலை
நூற்பா
ஆநின்று கின்று கிறுமூ விடத்தின்
ஐம்பால் நிகழ்பொழுது அறைவினை இடைநிலை
கிறு, கின்று, ஆநின்று என்னும் மூன்றும்மூன்று இடங்களிலும் ஐம்பாலிலும் நிகழ்காலத்தை காட்டுகின்ற இடைநிலைகள் ஆகும்.
(உ.ம்)நடக்கிறான்-கிறு, நடவானின்றான்-ஆநின்று
இ) எதிர்கால இடைநிலை
நூற்பா
பவ்வ மூவிடத்து ஐம்பால் எதிர்பொழுது
இசைவினை இடைநிலை யாம்இவை சிலசில.
ப், வ் என்னும் மெய்கள் மூன்று இடங்களிலும் ஐம்பால்களிலும் எதிர்காலத்தை காட்டுகின்ற இடைநிலைகள் ஆகும். (உ.ம்) நடப்பான்-ப், செல்வான்-வ்
முடிவுரை
ழுதவியல் என்னும் இயலானது பகுபத உறுப்பு பற்றி கூறினாலும், பகுதி, விகுதி, இடைநிலை என்ற மூன்று பற்றியே கூறுகிறது.

No comments: